மராட்டிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.

Update: 2019-01-04 21:15 GMT

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– திவிஜ் சரண் ஜோடி 6–3, 3–6, 15–13 என்ற செட் கணக்கில் சிமோன் போலெலி (இத்தாலி)– இவான் டோடிக் (குரோஷியா) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஜோடி இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்– ஜானி ஓமரா இணையை சந்திக்கிறது.

ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் இவோ கார்லோவிச் 7–6 (3), 4–6, 6–3 என்ற செட் கணக்கில் ஸ்டீவ் டார்சிசை (பெல்ஜியம்) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

மேலும் செய்திகள்