நான் தூங்குவதற்கு முன்பு எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன - நவோமி ஒசாகா

நான் தூங்குவதற்கு முன்பு எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன என ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-14 12:23 GMT
டோக்கியோ,

பாரீஸ் நகரில் மே 24-ந்தேதி தொடங்க இருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சத்தால் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில், இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நவோமி ஒசாகா சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

என்னை மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க லாக் டவுன் நேரத்தை எடுக்க விரும்புகிறேன். நான் தூங்குவதற்கு முன்பு எனக்கு நிறைய வருத்தங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்