பிரெஞ்ச் ஓபன்: ஆஷ்லி பார்ட்டி விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஆஷ்லி பார்ட்டி விலகினார்.

Update: 2020-09-08 23:15 GMT
சிட்னி, 

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதை தவிர்த்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்