பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 11-ந் தேதி வரை பாரீஸ் நகரில் நடக்கிறது.

Update: 2020-09-18 21:45 GMT
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 11-ந் தேதி வரை பாரீஸ் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், கடந்த வாரம் முடிந்த அமெரிக்க ஓபனில் பட்டத்தை வென்றவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காயம் காரணமாக விலகியுள்ளார். இது குறித்து நவோமி ஒசாகா தனது டுவிட்டர் பதிவில், ‘எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபனில் என்னால் விளையாட முடியவில்லை. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு இன்னும் குணம் அடையவில்லை. எனவே களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டிக்கு தயாராக எனக்கு போதிய காலஅவகாசம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்