பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: குணேஸ்வரன் தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.

Update: 2020-09-23 22:30 GMT
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதை யொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், அலெக்சாண்டர் விகிக்கை (ஆஸ்தி ரேலியா) சந்தித்தார். 1½ மணி நேரம் நடந்த இந்த மோதலில் குணேஸ் வரன் 4-6, 5-7 (4-7) என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்