கொரோனா அதிகரிப்பு: ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து

ரியோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரேசிலில் கடந்த பிப்ரவரி மாதம் மத்தியில் நடக்க இருந்தது.

Update: 2021-04-02 22:32 GMT

கொரோனா அச்சுறுத்தலால் இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்பதால் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். அடுத்த ஆண்டு (2022) போட்டி வழக்கம் போல் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்