பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கிறார், பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.
சூரிச்,
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார். கால்முட்டி காயத்தால் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை தவிர்த்த 39 வயதான பெடரர் மீண்டும் களம் திரும்புவதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அடுத்த மாதம் 30-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.