ஒலிம்பிக்: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- அங்கிதா இணை தோல்வி

டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.

Update: 2021-07-25 03:59 GMT
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மற்றும் வில்வித்தை தகுதி சுற்று போட்டி மட்டுமே நடந்தது.

 போட்டியின் 3-வது நாளான இன்று  டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில்  இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியை தழுவியது.  உக்ரைனின் கிச்சனோக் சகோதரிகள் இணையிடம் 6-0, 6-7,8-10 என்ற செட் கணக்கில் சானியா - அங்கிதா இணை தோல்வி அடைந்தது. 

மேலும் செய்திகள்