மியாமி ஓபன் டென்னிஸ்: போபண்ணா-எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

போபண்ணாவுக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் டாப்-10ல் தொடர்ந்து நீடிக்க உதவும்.

Update: 2024-03-27 07:27 GMT

மியாமி கார்டன்ஸ்:

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார். தொடர்ந்து முன்னேறிய இந்த ஜோடி, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், செம் வெர்பீக்(நெதர்லாந்து)- ஜான் பேட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் துவக்கத்தில் போபண்ணா-எப்டன் ஜோடி, அடுத்தடுத்து தவறுகள் செய்ததால் முதல் செட்டை இழந்தது. அதன்பின், சிறப்பாக ஆடிய இவர்கள், 3-6, 7-6 (4), 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மார்செல்-ஹோராசியோ மற்றும் லாயிட் கிளாஸ்பூல்-ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் ஜோடியுடன், போபண்ணா-எப்டன் ஜோடி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள போபண்ணாவுக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் டாப்-10ல் தொடர்ந்து நீடிக்கவும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவும் உதவும்.

Tags:    

மேலும் செய்திகள்