எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும் - ரசிகர்களுக்கு செல்வராகவன் அறிவுரை

இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-04-12 12:18 IST

சென்னை,

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். 'பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக '7ஜி ரெயின்போ காலனி' படத்தினை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி படத்தின் அப்டேட்டுகள் மற்றும் ஒரு சில தகவல்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பார். இந்த நிலையில், செல்வராகவன் ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுரை கூறும் விதமாக விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், எதிர்மறையான எண்ணங்களை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு செல்வராகவன் அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது, "நம் வாழ்க்கையில் எதிர்மறையாக எது நடந்தாலும் கடவுளே நீ அதை பார்த்துகோள் என்று சொல்லி பழகுங்கள். அதனை கடவுள் பார்த்து கொள்ளுவார், பின்னர் நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள். அப்படி செய்தால் கொஞ்ச நாட்களில் எதிர்மறையான எண்ணங்களின் தீவிரம் குறைந்து நல்லதே நடக்கும். ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது, ஆனால் ஒரு சமயத்தில் உங்களுக்கு முழு நம்பிக்கை வரும், முயற்சி செய்து பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்