கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

வைகாசி திருவிழாவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றன.;

Update:2025-05-30 16:53 IST

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த 11-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. 18-ம் தேதி கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டுதல் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் வீதியுலா நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26-ம் தேதி மாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன், பேச்சியம்மன், வாழவந்த பிள்ளையார் ஆகிய உற்சவர்களை தனித்தனி தேரில் எழுந்தருளச் செய்தனர். சிறுவர்கள் பிள்ளையார் தேரையும், பெண்கள் பேச்சியம்மன் தேரையும், பொதுமக்கள் முத்து மாரியம்மன் தேரையும் இழுத்தனர்.

27-ம் தேதி மஞ்சள் விளையாட்டு (தீர்த்தம்), 28-ம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவைத் தொடர்ந்து, நேற்று இரவு (29-ம் தேதி) தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தெப்பக்குளத்தின் கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்