திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரேநாளில் சுமார் 85 ஆயிரம் பேர் சாமிதரிசனம்
ஒரே நாளில் 35,261 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 84,681 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
35,261 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 43 லட்சம் கிடைத்திருப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.