மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் விரக்தி: மாற்றுத்திறனாளி மகன்களை கொன்று தற்கொலை செய்த நபர்

சுனிலின் மனைவி 2 வாரங்களுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறினார்.;

Update:2025-08-16 18:47 IST

தாதர் நாகர் ஹவெலி,

டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் தாதர் நாகர் ஹவெலி மாவட்டம் சில்வசா பகுதியை சேர்ந்தவர் சுனில் பஹ்ரே (வயது 56). இவருக்கு திருமணமாகி ஜெய் (வயது 18), ஆர்யா (வயது 10) என 2 மகன்கள் இருந்தனர். 2 மகன்களும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். சுனித் தனது மனைவி, மகன்களுடன் சில்வசா பகுதியில் வசித்து வந்தார்.

இதனிடையே, சுனிலின் மனைவி 2 வாரங்களுக்குமுன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், சுனில் தனது 2 மகன்களை கவனித்து வந்தார்.

இந்நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் விரக்தியடைந்த சுனில் நேற்று மாலை தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்