பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் உள்பட மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு

டெல்லி சென்றுள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை இன்று சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.;

Update:2025-05-24 01:19 IST

புதுடெல்லி,

நிதி ஆயோக் என்பது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இதன் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே டெல்லி சென்றுவிட்டார்.

இன்று காலை 9 மணிக்கு அங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

------

Tags:    

மேலும் செய்திகள்