‘பிற்படுத்தப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவோம்’ - ராகுல் காந்தி

பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்கான வழி கல்விதான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-25 14:37 IST

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில், பீகார் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘இந்தியா’ கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பா.ஜ.க. எத்தனை பொய்களை கூறி, திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டாலும், தலித், பழங்குடி, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அவர்களின் முழு உரிமைகளையும் பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய வழி கல்விதான். தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி SC/ST/OBC/EBC குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும்.

‘தகுதியற்றவர்கள்’ என்று ஒதுக்கப்படும் அநீதியான நடைமுறை முடிவுக்கு வரும் என்று காந்தி கூறினார். இது கல்விக்கான போராட்டம் மட்டுமல்ல, மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கான சமத்துவம் மற்றும் மரியாதைக்கான போராட்டம். இது உண்மையான சமூக நீதி மற்றும் சமமான வளர்ச்சிக்கான உத்தரவாதம்.”

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்