சிறுமியை கடத்தி பலாத்காரம்; மீனவருக்கு 10 ஆண்டு சிறை

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-09-02 17:52 GMT

புதுச்சேரி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் என்கிற பாவாடை (வயது30). மீனவரான அவர் திருமணம் ஆனவர்.

கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சதீஷ் ஆசை வார்த்தைக்கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சதீசை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

10 ஆண்டு தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டு நீதிபதி ஜெ.செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மீனவர் சதீஷ் மீது, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்