கத்தியுடன் பதுங்கியிருந்தவர் கைது

புதுவையில் வழிப்பறி செய்யும் நோக்கில் கத்தியுடன் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-11 16:11 GMT

புதுச்சேரி

லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் இன்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாகூர் கலைக் கல்லூரி மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றார். அவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியபோது கத்தி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர், லாஸ்பேட்டை வாசன் நகரை சேர்ந்த யோகேஷ்வர் (வயது23) என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் வழிப்பறி செய்யும் நோக்கில் அங்கு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கும், லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கும் உள்ளது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்