தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்க எதிர்ப்பு

தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயரை பதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-09 17:05 GMT

புதுச்சேரி

புதுவை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயரை பதிக்க சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைதானவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும், சாவர்க்கர் பெயரை தியாக பெருஞ்சுவரில் பதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சமூக அமைப்பினர் இன்று அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் களம் செயலாளர் அழகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்