பிளஸ்-1 மாணவி கடத்தல்?

வில்லியனூர் அருகே பிளஸ்-1 படிக்கும் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-01 14:29 GMT

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கூடபாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது இளைய மகள் கெஜலட்சுமி (வயது 16). வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இறுதி தேர்வு எழுத சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதில் தனது மகளை யாரேனும் கடத்தி சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்