ரேணுகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகரில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி மற்றும் மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-01 13:50 GMT

புதுச்சேரி

புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகரில் ரேணுகா பரமேஸ்வரி மற்றும் மீனாட்சி அம்பிகா சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு காலபைரவர், சூரியன், சந்திரன் மற்றும் பால விநாயகர், பாலமுருகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

மேலும் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சபாநாயகர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ராஜேந்திரன், கோவில் குருக்கள் ராமகிருஷ்ண அய்யர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்