வாலிபருக்கு கத்திக்குத்து

முதலியாா்பேட்டையில் வாலிபா் மீது கத்தியால் குத்தியவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-02 17:57 GMT

புதுச்சேரி

முதலியார்பேட்டை அன்சாரி துரைசாமி வீதியை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 32). இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நைனார்மண்டபம் மார்க்கெட் வீதியில் டிபன் வாங்க ஜான்பீட்டர் சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த பாலாஜி என்பவர் ஜான்பீட்டரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து ஜான்பீட்டர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில நேற்று நைனார்மண்டபத்துக்கு ஜான்பீட்டர் சென்றபோது அவருடன் மீண்டும் பாலாஜி தகராறு செய்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்