ஆட்டோவை திருடி வந்த வாலிபர் கைது

சென்னையில் இருந்து ஆட்டோவை திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-23 18:11 GMT

காரைக்கால்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் போலீசார் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தமிழக பதிவு எண் கொண்ட ஆட்டோவை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவிற்கான உரிமத்தை கேட்டனர். ஆனால் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இ்ல்லை. சென்னையில் இருந்து ஆட்டோவை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் சிதம்பரத்தை சேர்ந்த கலியமூர்த்தி (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்