சிறுமியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளி கைது

காரைக்காலில் சிறுமியை கர்ப்பமாக்கிய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-03 18:03 GMT

காரைக்கால்

காரைக்கால் முல்லைநகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், பெற்றோரை இழந்து உறவினர் பாதுகாப்பில் இருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில் காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நிச்சயம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகளுக்கு பின்னரே திருமணம் செய்ய உள்ளதாகவும் இருதரப்பு குடும்பத்தாரும் கூறியுள்ளனர்.

இதையடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் இன்று அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரவிசங்கர், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்