தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்கிற்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-31 15:47 IST

சென்னை,

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

*நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே

*நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா

*நில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்

* போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி

* கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு

* குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்

* மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்

* வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா

* கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்

* சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்