சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 14 மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 14 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-07-29 00:38 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-பொன்னேரி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 31-ந்தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்டிரலில் இருந்து காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25, மதியம் 12, 1 மணிக்கு சென்டிரல் வரும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 10.15 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயிலும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.40 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.

எனவே இந்த 2 நாட்களும் சென்டிரல்-பொன்னேரிக்கு காலை 8.5, 9, 9.30 மணிக்கும், பொன்னேரி-சென்டிரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கும், பொன்னேரி-கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், கடற்கரை-மீஞ்சூருக்கு காலை 9.40 மணிக்கும், சென்டிரல்-எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், எண்ணூர்-சென்டிரலுக்கு மதியம் 12.43 மணிக்கும், சென்டிரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், மீஞ்சூர்- சென்டிரலுக்கு காலை 11.56, மதியம் 1.31 மணிக்கும், சூலூர்பேட்டை- சென்டிரலுக்கு மதியம் 12.20 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்