குமரி: அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் தங்க நகை திருட்டு

பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-09-14 06:37 IST

குமரி,

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குசவன்குழியை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி கெர்லின் ஜெர்மன் (வயது 57). இவரது மகளின் மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று கெர்லின் ஜெர்மன் தனது மகள் மற்றும் பேரனுடன், சிகிச்சைக்காக வெள்ளமடம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பேரனுக்கு சிகிச்சை அளித்துவிட்டு அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ் மூலம் நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

அங்கிருந்து கருங்கல் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். அப்போது கெர்லின் ஜெர்மன் கழுத்தில் அணிந்திருந்த 8.75 பவுன் நகை மாயமாகி இருந்தது. அதில் இருந்த டாலர் மட்டும் அவரது கையில் கிடைத்தது. பஸ்சில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமிகள் நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கெர்லின் ஜெர்மன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பஸ் நிலையத்தில் அரசு பஸ்சில் ஏறிய பெண்ணிடம் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்