கடல் நீர்மட்டம் தாழ்வு: குமரியில் 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.;

Update:2025-08-26 01:57 IST

கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர் 9.30 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து 1½ மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர். தொடர்ந்து 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்