பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின் தடை

தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-06-18 15:34 IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (19.6.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பின்வரும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச்ரோடு, லயண்ஸ்டவுண், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ்காலனி, செயின்பீட்டர் கோவில்தெரு, தெற்கு எம்பரர்தெரு, மணல்தெரு, பெரைராதெரு, விக்டோரியாதெரு, பெரியகடைதெரு, ஜார்ஜ்ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் தெரு, சந்தைரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர், பெரியசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர், முடுக்குகாடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்