மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் 7ம் தேதி மின்தடை
தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் வருகிற 7ம் தேதி மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், தூத்துக்குடி நகர்ப்புற செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் 7.10.2025, செவ்வாய்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம், மேலசண்முகபுரம்,
ஸ்டேட்பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசிரியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 7ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.