உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் - விஜய்

தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-01 09:19 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி. உறுதியை ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!

உழைப்பாளர் உரிமை காப்போம்!

இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்