இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;

Update:2025-10-08 19:55 IST

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்