காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்?
மேற்குவங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.;
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்த்ல் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.