சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது.;
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்பட்டது.