அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெப்ரி பெர்குசன் (வயது 74). ஆரஞ்சு கவுண்டி நீதிபதியான இவர் தனது மனைவி ஷெரிலுடன் வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு குடும்ப நிதியை கையாள்வது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெர்குசன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சரமாரியாக சுட்டார். இதில் படுகாயம் அடைந்த ஷெரில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பெர்குசனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும் அவரது வீட்டில் இருந்து சுமார் 50 துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டதை பெர்குசன் ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.