நாடாளுமன்ற தேர்தல்: கவர்னர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்

கவர்னர் ஆர்.என்.ரவி தனது வாக்கினை பதிவு செய்தார்.

Update: 2024-04-19 06:19 GMT

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை கிண்டி அருகே உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்