ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு அறிவித்த சி.எஸ்.கே.நிர்வாகம்

சாம்பியன்ஸ் டிராபி நிறைவடைந்ததும் தாயகம் திரும்பிய ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.;

Update:2025-03-11 10:01 IST

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது. இந்த தொடருக்காக தற்போது ஐ.பி.எல்.அணிகள் அனைத்தும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய வீரர்கள் தனித்தனியாக தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் முன்னணி வீரரான ஜடேஜா தாயகம் திரும்பியதும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியுடன் இணைந்துள்ளார்.

இதனை சி.எஸ்.கே. நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் அண்மையில் வெளியான 'புஷ்பா' திரைப்பட பாணியில் மாஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்