பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இந்திய பிளேயிங் லெவனில் களமிறங்கும் நட்சத்திர வீரர்..?

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.;

Update:2025-09-13 14:06 IST

image courtesy:PTI

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கொண்டு களமிறங்கி விளையாடியிருந்தது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபேவை பேக் அப் வேகப்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தியது.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் 2-வது முழுநேர வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நட்சத்திர பவுலரான அர்ஷ்தீப் சிங்கை களமிறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக திலக் வர்மா அல்லது ஷிவம் துபே ஆகியோரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்