முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியா - இலங்கை ஆட்டம்.. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது.;
image courtesy: twitter/@BCCIWomen
கொழும்பு,
இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. மே 11-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. கொழும்புவில் காலை 10 மணியளவில் இந்த ஆட்டம் தொடங்க இருந்தது.
இந்நிலையில் கொழும்புவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.