கால்பந்து போட்டி - இந்தியா வரும் ரொனால்டோ

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார் .;

Update:2025-08-15 20:07 IST

Image : AlNassr FC

புதுடெல்லி,

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கிளப் போட்டிகளில் அல் நாசர் (சவுதி அரேபியா ) அணிக்காக விளையாடி வருகிறார் .இந்த நிலையில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் (AFC Champions League) போட்டியில் விளையாடுவதற்காக ரொனால்டோ இந்தியா வருகிறார் .

குரூப் டி பிரிவில் அல் நாசர் , எப்சி கோவா (இந்தியா) , பெர்சபோலிஸ் (ஈரான்) மற்றும் அல்-துஹைல் (கத்தார்) அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அல் நாசர் - கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனால் ரொனால்ட்கோ இந்தியா வர உள்ளது உறுதியாகியுள்ளது

இந்த போட்டி எப்போது மற்றும் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது . இந்தச் செய்தி இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்