ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து: நேபாளத்தை பந்தாடிய இந்திய அணி
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.;
image courtesy:twitter/@IndianFootball
திம்பு,
7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 7-0 என்ற கணக்கில் நேபாளத்தை பந்தாடி அபார வெற்றி பெற்றது. அபிஸ்தா பாஸ்நெட், நீரா சானு லாங்ஜாம், அனுஷ்கா குமாரி தலா 2 கோலும், ஜூலன் ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.