பேகா ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி

அனாஹத் சிங் , எகிப்தின் நூர் கபாகியை எதிர்கொண்டார்.;

Update:2025-08-17 13:56 IST

மெல்போர்ன்,

பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் அனாஹத் சிங் (இந்தியா) , எகிப்தின் நூர் கபாகியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அனாஹத் சிங் 10-12, 11-5, 11-5, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் நூர் கபாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதி ஆட்டத்தில் மற்றொரு எகிப்து வீராங்கனை ஹபிபா ஹானியுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்