திருவண்ணாமலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்


திருவண்ணாமலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்
x

நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றடைந்தார்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, ஆரணியில் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து, திருவண்ணாமலையில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிப்பாடி அருகில் உள்ள சோ.காட்டுக்குளத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார். அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மு.பெ.கிரி எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசுகிறார். இதில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை சென்றடைந்தார்.


Next Story