செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 8:31 PM GMT (Updated: 13 Dec 2020 8:31 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 66 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

70 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 70 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 663 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 451 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 664 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 720-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 496 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 732 பேர் உயிரிழந்துள்ளனர். 492 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 160-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 496 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 430 பேர் உயிரிழந்துள்ளனர். 234 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story