செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,164 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,164 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 2:41 AM GMT (Updated: 30 April 2021 2:41 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,164 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

1,164 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,164 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 938 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 142 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 352 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 142 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உயர்ந்துள்ளது. 2,904 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


Next Story