கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு


கன்னியாகுமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை - அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 16 Sep 2021 8:59 AM GMT (Updated: 16 Sep 2021 8:59 AM GMT)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக அங்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள 5 முக்கிய அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story