ஈரோட்டில் உள்ள சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஈரோட்டில் உள்ள சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 11:04 AM GMT (Updated: 4 Oct 2021 11:04 AM GMT)

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலைக்கு குமரன் பெயரிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

குமரன், நொய்யல் ஆற்றங்கரையில் ஜனவரி 11, 1932 அன்று நடந்த ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆங்கிலேயர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தார் இருந்தபோதிலும்  இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது உயிர் பிரியும் வரையிலும் கொடியைக் கீழே விழாமல் காத்தார். இதனால் கொடி காத்த குமாரன் என்று பெயர் பெற்றார்.

அவரது பிறந்த நாளான இன்று, ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலையை தியாகி குமரன் சாலை, சம்பத் நகர் என்று பெயரிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அரசு உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினார். 

Next Story