பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது


பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
x
தினத்தந்தி 24 March 2020 11:04 PM GMT (Updated: 24 March 2020 11:04 PM GMT)

பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இஸ்லாமாபாத்,

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம்டாக்டர் உள்பட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் 750-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு போராடி வருகிறது.

இந்த இக்கட்டான சூழ் நிலையில் பாகிஸ்தான் நேற்று முன்தினம் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. 750 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘பாபூர்-2’ என்ற ஏவுகணை பாகிஸ்தான் சோதித்தது.

எனினும் இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் ஏவப்பட்ட ‘பாபூர்-2’ ஏவுகணை 14 கி.மீ. தொலைவிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது.

‘பாபூர்-2’ ஏவுகணையை சோதிக்கும் முயற்சியில் பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். முன்னதாக கடந்த 14-ந்தேதி இதே பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து ‘பாபூர்-2’ ஏவுகணை ஏவப்பட்டதும், புறப்பட்ட 2 நிமிடத்திலேயே அது தரையில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story