15 வயது இருக்கும் போது பாலியல் சீண்டல் - பிரபல நடிகை

தனக்கு 15 வயதாக இருக்கும் போது நடந்த பாலியல் சீண்டல் குறித்து நடிகை அதிதி கூறி உள்ளார்.

Update: 2017-09-22 08:38 GMT
சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்கள் சினிமா வாழ்க்கையில்  சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும், இன்னல்களை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

பெண்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் பாலியல் தீண்டல்களால் அவதிக்குள்ளாவது தவிர்க்க முடியாதவையாகி விடுகிறது.தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து பல்வேறு பெண்கள் மற்றும் நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்து மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகை சோனம் கபூர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்தார். தற்போது, நடிகை அதிதி ராவ் 15 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும், கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கு பெண்கள் அனைவரும் சேலை அணிந்துகொண்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் நானும் சேலை அணிந்துகொண்டு சாமி தரிசனத்திற்காக கோயில் வரிசையில் நின்றிருந்தேன்.

அப்போது, நபர் ஒருவர் எனது வயிற்றில் கைவைத்தார். இரண்டு, மூன்று தடவை இவ்வாறு செய்துகொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த நான் அவரது கன்னத்தில் அறைந்தேன், ஆனால் அந்நபர் எதுவும் நடக்காதது போன்று, என்ன என்ன என்று கேட்டுக்கொண்டே இருந்தார். உடனே, அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர், பெண்கள் தங்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்