‘பத்மாவதி’ பட விவகாரம் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கருத்து

நடிகை தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தீபிகா படுகோனேவின் தலையை எடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அரியானா மாநில பா.ஜனதா பிரமுகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

Update: 2017-11-20 21:46 GMT
சென்னை, 

நடிகர் கமல்ஹாசன், நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது உடலை விட தலைக்கு அதிக மரியாதை கொடுங்கள். இன்னும் சொல்லப்போனால், அவரது சுதந்திரத்துக்கு மரியாதை கொடுங்கள். அதை பறிக்காதீர்கள்.

எனது படங்களுக்கு பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது வருந்தத்தக்கது. எழுந்து நில் இந்தியா. இது சிந்திக்க வேண்டிய நேரம். நாம் போதுமான அளவு சொல்லி விட்டோம். இந்தியாவே கவனி.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்