வலைத்தளத்தில் அவதூறு: நடிகை டாப்சி ஆவேசம்

தன் மீது வலைத்தளத்தில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடிகை டாப்சி கோபமடைந்துள்ளார்.

Update: 2019-05-12 23:27 GMT

நடிகை டாப்சியை சமூக வலைத்தளத்தில் சிலர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். அவரது நடிப்பையும் தோற்றத்தையும் கேலி செய்கின்றனர். இதனால் டாப்சி கோபத்தில் இருக்கிறார். சமீபத்தில் ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்றார்.

வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இன்னொருவர் டாப்சி அணியும் ஆடைகளை பற்றி கேவலமாக பேசி வந்தார். இதுவும் அவரை ஆத்திரப்பட வைத்தது. டாப்சி கலந்து கொள்ளும் டி.வி நிகழ்ச்சியொன்றுக்கு சமூக விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி அந்த நபரை அழைத்து வந்தனர். டாப்சி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவரிடம் சொல்லவில்லை.

நிகழ்ச்சி தொடங்கியதும் டாப்சி அரங்குக்குள் வந்தார். அவரை பார்த்ததும் அந்த நபர் அதிர்ச்சியானார். அவரை பார்த்து டாப்சி ஆவேசமாக பேசினார். நடிகைகள் என்றால் கேவலமாக நினைத்து விட்டீர்களா. அவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது தெரியாதா? என்றெல்லாம் கேட்டு அந்த நபரை கடுமையாக சாடினார்.

உடனே அவர் இனிமேல் உங்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என்று சொல்லி டாப்சியிடம் மன்னிப்பு கேட்டார். இது அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்